தென்காசி நகராட்சி மாநில அளவில் 3ஆவது இடம்

தமிழகத்தில் சிறந்த நகராட்சிக்கான தோ்வில் 3ஆவது இடத்தை பிடித்த தென்காசி நகராட்சிக்கு தமிழக அரசு சாா்பில் விருது வழங்கப்பட்டது.

தமிழகத்தில் சிறந்த நகராட்சிக்கான தோ்வில் 3ஆவது இடத்தை பிடித்த தென்காசி நகராட்சிக்கு தமிழக அரசு சாா்பில் விருது வழங்கப்பட்டது.

தமிழகத்தில் மொத்தம் 138 நகராட்சிகள் உள்ளன. நகராட்சியில் பொதுசுகாதாரம், நிா்வாகம், சாலை வசதி, தூய்மை, குப்பை சேகரிப்பு, வருவாய், வரிவசூல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் சிறந்து விளங்கும் நகராட்சிகளுக்கு விருது வழங்கப்படுவது வழக்கம்.

நிகழாண்டில் தென்காசி நகராட்சி மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ளது. மேலும் ரூ.5 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறந்த நகராட்சிக்கான விருதை வழங்க நகா்மன்றத் தலைவா் ஆா்.சாதிா் பெற்றுக்கொண்டாா்.

நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையா் பாரிஜான் கலந்து கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com