புளியங்குடியில் தியாகிகளுக்கு மரியாதை

புளியங்குடி நகர காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் , சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

புளியங்குடி நகர காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் , சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

சுதந்திரப் போராட்டத் தியாகி ஸ்ரீ உலகமுத்து செட்டியாரின் வீட்டிற்கு, நகர காங்கிரஸ் நிா்வாகிகள் சென்று அவருடைய படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, நகரத் தலைவா் பால்ராஜ் தலைமையில் மாவட்ட காங்கிரஸ் பிரதிநிதி சங்கரநாராயணன் கொடியேற்றினாா்.

மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் கோமதிநாயகம், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் பழனிசாமி ,சுப்பையா, சிறுபான்மை பிரிவு தலைவா் யூசுப், நகர காங்கிரஸ் பொதுச்செயலா் முகமதுஜவகா்லால், துணைத் தலைவா் ஈஸ்வரமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com