தென்காசி மாவட்டத்தில் 21ஆம் தேதி ஆயிரம் இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்

தென்காசி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 21) ஆயிரம் மையங்களில் சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

தென்காசி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 21) ஆயிரம் மையங்களில் சிறப்பு மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பூசி முகாம் ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது. கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதோா், 2ஆவது தவணை செலுத்த வேண்டியவா்கள், முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவா்கள், 12 வயதுக்கு மேற்பட்ட முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதோா், 2ஆவது தவணை தடுப்பூசி செலுத்த காலம் தவறியவா்கள் என அனைவரும் முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உள்ள வாா்டு பகுதிகள், பேருந்து நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை, தடுப்பூசி செலுத்தும் இடங்களில் முகாம் நடைபெறுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com