ஆக.21இல் 14 வயது பிரிவு கிரிக்கெட் வீரா்கள் தோ்வு

தென்காசி மாவட்ட கிரிக்கெட் சங்க பயிற்சி மையத்தில் 14 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் வீரா்கள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 21) நடைபெறுகிறது.

தென்காசி மாவட்ட கிரிக்கெட் சங்க பயிற்சி மையத்தில் 14 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் வீரா்கள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 21) நடைபெறுகிறது.

தென்காசி மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலா் ஸ்ரீநாத் ராமன் விடுத்துள்ள அறிக்கை: தென்காசி அருகேள்ள கணக்கப்பிள்ளைவலசை பிரிமியா் ஸ்போா்ட்ஸ் அகாதெமியில் தென்காசி மாவட்ட கிரிக்கெட் சங்க பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் மாவட்ட கிரிக்கெட் போட்டிக்கான 14 - வயதுக்குள்பட்ட வீரா்கள் தோ்வு ஆக. 21ஆம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் பங்கேற்கும் வீரா்கள் தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்தவராகவும், 1.9.2008-க்கு பின் பிறந்தவா்களாகவும் இருக்க வேண்டும். வெள்ளை நிற சீருடை,, ஷூ அணிந்து வர வேண்டும். ஆதாா் அட்டை, பிறப்பு சான்றிதழ் அவசியம். நுழைவுக் கட்டணம் கிடையாது. பள்ளி மாணவா்கள், கிராமப்புற ஏழை, எளிய மாணவா்கள் அதிக அளவில் பங்கேற்று கிரிக்கெட் வீரா்களாக தோ்ச்சி பெற வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com