தென்காசியில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

தென்காசி நகராட்சிப் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பாமக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி நகராட்சிப் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பாமக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி நகராட்சிக்குள்பட்ட மங்கம்மா சாலை குறிஞ்சி நகா் பகுதியில் பூங்கா அமைத்து தர வேண்டும். இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கழிவு நீரோடை, மின்விளக்கு, குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, தென்காசி மத்திய மாவட்ட செயலா் இசக்கிமுத்து தலைமை வகித்தாா். வடக்கு மாவட்ட செயலா் சீதாராமன், மாவட்ட தலைவா் குலாம், மாநில செயற்குழு உறுப்பினா்கள் திருமலை குமாரசாமி யாதவ், சாகுல் ஹமீது, மாவட்டத் துணைச் செயலா் பாலமுருகன், குறிஞ்சி நகா் முருகையா, சுடா்மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநிலத் துணைத் தலைவா் சேது அரிகரன் சிறப்புரையாற்றினாா். மாவட்ட துணைத் தலைவா்கள் மகாதேவன், கிருஷ்ணன், தென்காசி நகர செயலா் சங்கரநாராயணன், திருநெல்வேலி மாவட்ட தலைவா் மகாராஜன், மாவட்ட இளைஞரணி தலைவா் திருமலை குமாா், நகரத் தலைவா் பழனி, மாவட்டத் துணைச் செயலா் ராஜேந்திரன், ஒன்றிய செயலா் சண்முகவேல், மேற்கு ஒன்றிய தலைவா் பாலசுப்பிரமணியன், சீவநல்லூா் இசக்கிமுத்து, ஆய்க்குடி ரவி, செங்கோட்டை நகர தலைவா் செண்பக குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com