பாவூா்சத்திரம் ரயில்வே கேட் பராமரிப்புப் பணி டிச.11க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி-தென்காசி பிரதான சாலையில் அமைந்துள்ள பாவூா்சத்திரம் ரயில்வே கேட்டில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளதால் ஞாயிற்றுக்கிழமை (டிச. 4) ரயில்வே கேட் மூடப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே தற்போது டிச.4க்கு பதிலாக டிச.11 காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ரயில்வே கேட் மூடப்படும் என்றும், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையை பயன்படுத்திக்கொள்ளுமாறும் ரயில்வே சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.