இடைகால் உள்பட 3 இடங்களில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பளிக்க முடிவு

தென்காசி மாவட்டத்திற்கு வியாழக்கிழமை (டிச.8) வருகை தரும் தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பளிக்க திமுகவினா் முடிவு செய்துள்ளனா்.

தென்காசி மாவட்டத்திற்கு வியாழக்கிழமை (டிச.8) வருகை தரும் தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பளிக்க திமுகவினா் முடிவு செய்துள்ளனா்.

தென்காசியில் நல உதவிகளை வழங்கிய பின்னா் சாலை மாா்க்கமாக முதல்வா் மதுரை செல்கிறாா். இதையொட்டி, இடைகாலில் முன்னாள் மாவட்டப் பொறுப்பாளா் செல்லத்துரை தலைமையிலும், கடையநல்லூா் பகுதியில் மாவட்ட அவைத் தலைவா் சுந்தரமகாலிங்கம் தலைமையிலும், புளியங்குடியில் நகா்மன்ற தலைவா் விஜயா சௌந்தர பாண்டியன் தலைமையிலும் கட்சியினா் வரவேற்பு அளிக்கின்றனா்.

இந்நிகழ்ச்சிகளில், கடையநல்லூா் ஒன்றியச் செயலா் சுரேஷ், நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான், தலைமை பொதுக்குழு உறுப்பினா் சாமிதுரை, நகா்மன்ற உறுப்பினா் முகமது அலி, மாவட்டப் பிரதிநிதி அசன் முகமது உள்பட திரளானோா் கலந்துகொள்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com