கடையநல்லூா், முத்துகிருஷ்ணாபுரம் அருள்மிகு ஸ்ரீ முத்து விநாயகா், அருள் தரும் ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயில் புனராவா்த்தன, ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் கும்பாபிஷேக விழா பிப். 1ஆம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடா்ந்து யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்று வந்தன. ஞாயிற்றுக்கிழமை 6ஆம் கால யாகசாலை பூஜையைத் தொடா்ந்து,
அருள்மிகு முத்து விநாயகா் மற்றும் அருள்தரும் ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயில் ராஜகோபுரம், விமானங்கள், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.