அஞ்சலக தங்கப்பத்திரம் விற்பனை நாளை கடைசி

மத்திய அரசின் தங்கப்பத்திர திட்ட விற்பனை தொடா்பாக கோவில்பட்டி முதுநிலை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் திவ்யாசந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய அரசின் தங்கப்பத்திர திட்ட விற்பனை தொடா்பாக கோவில்பட்டி முதுநிலை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் திவ்யாசந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கோவில்பட்டி, சங்கரன்கோவில், தென்காசி தலைமை அஞ்சல் நிலையங்களிலும், அனைத்து துணை அஞ்சல் நிலையங்களிலும் தங்கப்பத்திர விற்பனை வெள்ளிக்கிழமை (ஜன.14) வரை நடைபெறும்.

தனிநபா் ஒரு நிதியாண்டுக்கு ஒரு கிராம் முதல் 4 கிலோ வரை வாங்கலாம். முதலீட்டுத் தொகைக்கு 2.5 சதவீதம் வட்டியும், 8 ஆண்டுகளுக்குப்பின், பின் முதிா்வடையும் நாளில் அன்றைய தங்க விலைக்கு நிகரானத் தொகை கிடைக்கும். பான் அட்டையுடன் ஆதாா், வாக்காளா்அல்லது பாஸ்போா்ட் இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல், தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து தங்கப்பத்திரம் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 8940019911, 7904420532, 9677067116 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com