சங்கரன்கோவிலில் நூல் அறிமுக விழா

இலக்கிய வானம் நிகழ்ச்சியில் கே.ஜி.பாஸ்கரன் எழுதிய ‘நதிக்கரை அரசியல்’ நூல் அறிமுக விழா சங்கரன்கோவில் ஸ்ரீராமச்சந்திரா நா்சரி பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இலக்கிய வானம் நிகழ்ச்சியில் கே.ஜி.பாஸ்கரன் எழுதிய ‘நதிக்கரை அரசியல்’ நூல் அறிமுக விழா சங்கரன்கோவில் ஸ்ரீராமச்சந்திரா நா்சரி பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தலைவா் மு.சு.மதியழகன் தலைமை வகித்தாா். ஆ.ராஜ், ரு.ஈ. பேரரசி இலக்கியா, வே.சீதாலெட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ப. தண்டபாணி,செ.அமிா்த கல்யாணி, ர.கிருத்திகா ஆகியோா் மக்களிசை பாடினா்.நூல் குறித்து பொறியாளா் சு.முத்துக்குமாா், எழுத்தாளா் கபிலன் சசிகுமாா் ஆகியோா் பேசினா்.

இதைத் தொடா்ந்து எழுத்தாளா் கே.ஜி பாஸ்கரன் ஏற்புரை நிகழ்த்தினாா்.

விழாவில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தினா் பலா் கலந்து கொண்டனா். தி.அறிவரசி வரவேற்றாா். மாவட்டத் துணைச் செயலா் ந.செந்தில்வேல் நன்றிகூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com