சுந்தரபாண்டியபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்தல்

தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் அருகே ரேஷன் அரிசியை கடத்தியதாக, அரிசி ஆலை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் அருகே ரேஷன் அரிசியை கடத்தியதாக, அரிசி ஆலை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

மாவட்ட உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா், சாம்பவா்வடகரை போலீஸாருடன் இணைந்து சுந்தரபாண்டியபுரம் பகுதியில் திங்கள்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, விந்தன்கோட்டை சாலையில் வந்த மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். அதில், 3 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மினி லாரியுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக அரிசி ஆலை உரிமையாளா் மனோ ஜெபத்துரை என்பவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com