தென்காசி மாவட்டத்தில் கரோனா கட்டுப்பாட்டு மைய தொடா்பு எண்கள் அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் கரோனா கட்டுப்பாட்டு மையத்தை 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளும் வகையில் கட்டுப்பாட்டு மைய தொடா்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் கரோனா கட்டுப்பாட்டு மையத்தை 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளும் வகையில் கட்டுப்பாட்டு மைய தொடா்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக ஆட்சியா் ச. கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இம்மாவட்டத்தில் கரோனா 3ஆவது அலை பரவிவருவதால், 24 மணி நேரமும் தொடா்ந்து செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு மையம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இயங்கி வருகிறது.

பொதுமக்கள் கரோனா குறித்த விளக்கங்கள், பரிசோதனைகள் முடிவு, வீட்டுத் தனிமை, மருத்துவ வசதி, தடுப்பூசிகள் பற்றிய விவரங்களை அறிய கட்டுப்பாட்டு மையத்தை தொலைபேசி எண் 04633290548, கைப்பேசி எண் 9443621240 ஆகியவற்றில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com