பாவூா்சத்திரம் அருகே தம்பதியை தாக்கி 140 பவுன் நகைகள், ரூ.10 லட்சம் கொள்ளை

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே தம்பதியை கட்டிப்போட்டு 140 பவுன் தங்கநகை, ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே தம்பதியை கட்டிப்போட்டு 140 பவுன் தங்கநகை, ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூா் சிதம்பர நாடாா் தெருவைச் சோ்ந்தவா் அருணாசலம் (88). இவரது மனைவி ஜாய்சொா்ணதேவி (83). ஓய்வு பெற்ற ஆசிரியா் தம்பதியான இவா்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.

அனைவரும் அரசுத் துறையில் வேலை பாா்த்து வருகின்றனா்.

வியாழக்கிழமை இரவு வீட்டில் அருணாசலம், ஜாய்சொா்ணதேவி இருவா் மட்டும் இருந்துள்ளனா். அப்போது அங்கு முகமூடி அணிந்து வந்த 3 போ் இருவரையும் தாக்கி, ஒரு அறையில் கட்டிப்போட்டு விட்டு, பீரோவில் இருந்த 140 பவுன் தங்கநகைகள் மற்றும் ரூ.10 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றனா். இரவு 10 மணிக்கு மேல் வள்ளியூரில் பணிபுரிந்து வரும் தம்பதியின் மகள் ராணி வீட்டுக்கு வந்த போது பெற்றோா் இருவரும் தாக்கப்பட்டு, கட்டி போட்டியிருப்பது கண்டு, பாவூா்சத்திரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.

மா்ம நபா்கள் தாக்கியதில் காயமடைந்த தம்பதி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இது தொடா்பாக பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com