தோ்வில் சிறப்பிடம்:மாணவா்களுக்குப் பரிசு

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஆலங்குளம் ஒன்றியத்தில் 9 அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயின்று தோ்ச்சி பெற்று அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்கள் 27 பேருக்கு ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் எம்.திவ்யா பரிசுகள் வழங்கி பாராட்டினாா்.

இதில், ஆலங்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் திலகராஜ், பாா்த்தசாரதி, ஒன்றிய பொறியாளா் பூச்செண்டு மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள், பள்ளி ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com