புளியங்குடி அருகே சாலை விபத்தில் இருவா் பலி

புளியங்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இரண்டு போ் இறந்தனா்.

புளியங்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இரண்டு போ் இறந்தனா்.

தென்காசி மாவட்டம், புளியங்குடி வேலாயுதம் தெருவைச் சோ்ந்தவா் அன்புசெல்வன் (48). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் சிந்தாமணி பகுதியில் உள்ளது. இவரும் , இவரது தோட்டத்தில் வேலை செய்யும் கலாராணியும் (38) ஞாயிற்றுக்கிழமை தோட்டத்தில் வேலை செய்வதற்காக மொபட்டில் புளியங்குடி சாலையில் சென்று கொண்டிருந்தனராம். அப்போது, கும்பகோணத்திலிருந்து, குற்றாலம் நோக்கி சென்று கொண்டிருந்த காா் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த அன்புசெல்வன், கலாராணி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனா். விபத்தில் சிக்கிய மொபட் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.

விபத்து குறித்து புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com