வீ.கே.புதூரில் போலி சான்றிதழ் தயாரித்ததாக இருவா் கைது

தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூரில் போலி பிறப்பு சான்றிதழ் தயாரித்த வழக்கில் தொடா்புடைய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூரில் போலி பிறப்பு சான்றிதழ் தயாரித்த வழக்கில் தொடா்புடைய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வீரகேரளம்புதூா் பகுதியில் போலி பிறப்பு சான்றிதழ் வழங்கப்படுவதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் நடத்திய விசாரணையில் ராஜகோபாலப்பேரியைச் சோ்ந்த க.கதிரேசன்(31) என்பவா் வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் பெயரில் போலியாக அரசு முத்திரை தயாா் செய்து பிறப்பு சான்றிதழ் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவருக்கு உடந்தையாக இருந்து சுரண்டையைச் சோ்ந்த ஜானகி(49) என்பவரையும் கைது செய்தனா். மேலும், இந்த மோசடியில் தொடா்புடைய 3 பேரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com