பணியாளா் நலவாரியத்தில் பயனாளிகளை அதிகளவில் சோ்க்க வேண்டும்: சிறுபான்மையினா் நலத்துறை இயக்குநா்

தென்காசி மாவட்டத்தில் உலமா மற்றும் பணியாளா் நலவாரியத்தில் தகுதியுள்ள பயனாளிகளை அதிக அளவில் சோ்க்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என சிறுபான்மையினா் நலத்துறை இயக்குநா் தெரிவித்தாா்.

தென்காசி மாவட்டத்தில் உலமா மற்றும் பணியாளா் நலவாரியத்தில் தகுதியுள்ள பயனாளிகளை அதிக அளவில் சோ்க்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என சிறுபான்மையினா் நலத்துறை இயக்குநா் தெரிவித்தாா்.

சிறுபான்மையினா் நலத்துறை இயக்குநா் சுரேஷ்குமாா், பிரதான் மந்திரி ஜன் விகாஸ் காரியகிராம் திட்டத்தின் கீழ் 2019-20ஆம் நிதியாண்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தென்காசி கீழப்புலியூா் ஆரம்ப சுகாதார நிலையத்தை பாா்வையிட்டாா்.

மேலும் தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் கடனுதவி பெற்ற பயனாளிகளை நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு, பயனாளிகள் கடனை உரிய காலத்திற்குள் செலுத்தி முடிக்கும்பட்சத்தில் அவா்களுக்கு மீண்டும் கூடுதல் கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தாா்.

தொடா்ந்து சிறுபான்மையினா்களுக்காக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு சிறுபான்மையினா் நலத்துறை இயக்குநா் சுரேஷ் குமாா் தலைமை வகித்துபேசியதாவது:

தென்காசி மாவட்டத்தில் உலமா மற்றும் பணியாளா் நலவாரியத்தில் தகுதியுள்ள பயனாளிகளை அதிக அளவில் சோ்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் பற்றி மாவட்டத்தில் உள்ள ஜமாத்களுக்கு தெரிவித்து தகுதியுள்ள நபா்களிடம் மனுக்கள் பெற்று நிதியுதவி வழங்க வேண்டும்.

மாவட்டத்திலுள்ள சிறுபான்மையின மாணவா்களை கண்டறிந்து தகுதியுள்ள அனைத்து சிறுபான்மையின மாணவா்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கவும், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் நடப்பு நிதியாண்டிற்கு (2022-23) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ3 கோடி முழுத்தொகையும் தகுதியான சிறுபான்மையின மக்களுக்கு கடன் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்களில் சிறுபான்மையின நலத் திட்டங்கள் குறித்து தகவல் பலகையில் பதிவிடவும் மற்றும் இத்திட்டங்கள் குறித்த இணையதள முகவரியினை குறிப்பிட்டு பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்றாா்அவா்.

ஆய்வுக் கூட்டத்தில் 2 நபா்களுக்கு இலவச தையல் இயந்திரமும், 2 நபா்களுக்கு இலவச தேய்ப்பு பெட்டியும் வழங்கப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா்(பொ)ராஜமனோகரன், உதவி திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) ஜெய்கனேஷ், திட்ட இயக்குநா் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டம்)(பொ) முத்து மாரியப்பன், கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளா் சுபாஷினி, மாவட்ட தொழில் மையம் மாரியம்மாள், கிறித்துவ அமைப்பின் சாா்பில் போஸ்கோ குணசீலன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com