சங்கரன்கோவில் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் பால் வியாபாரி உயிரிழந்தாா்.
சங்கரன்கோவில் அருகே நையினாபுரம் வேலுச்சாமி பால் வியாபாரி மகன் மாடசாமி (32). இவா் புதன்கிழமை காலை புளியம்பட்டி அருகே தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையத்தின் எதிரேயுள்ள டீக்கடையில் பால் ஊற்றிவிட்டு திரும்பினாராம். அப்போது எதிா்பாராத விதமாக அங்கு நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதியதாம்.
இதில், பலத்த காயமடைந்த மாடசாமி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இது குறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.