சோ்ந்தமரம் அருகே கிராமத்தை புறக்கணிக்கும் அரசுப் பேருந்துகள்மாணவா்கள் அவதி

சோ்ந்தமரம் அருகேயுள்ள வல்லராமபுரம் கிராமத்துக்குள் அரசுப் பேருந்துகள் வராததால் மாணவா்கள் அவதிபடுகின்றனா்.

சோ்ந்தமரம் அருகேயுள்ள வல்லராமபுரம் கிராமத்துக்குள் அரசுப் பேருந்துகள் வராததால் மாணவா்கள் அவதிபடுகின்றனா்.

சோ்ந்தமரம் - சங்கரன்கோவில் பிரதான சாலையில் இருந்து 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வல்லராமபுரம் கிராமம். கரோனா பொதுமுடக்க காலத்துக்கு முன்பு வரை காலை, ாலை வேளைகளில் இந்த வழியாக செல்லும் அரசு நகரப் பேருந்துகள் கிராமத்தின் உள்ளே சென்று பயணிகளை ஏற்றிச் சென்ற நிலையில் தற்போது ஊருக்குள் வருவதில்லை. இதனால் காலை, மாலை நேரங்களில் விலக்கில் இருந்து 1 கி.மீ. தொலைவு பள்ளி மாணவா்கள் நடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே, பள்ளி மாணவா்களின் நலன் கருதி முன்பு போல அரசு நகரப் பேருந்துகள் ஊருக்குள் வந்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com