சுரண்டை பகுதியில் முன்அறிவிப்பின்றி அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.
சுரண்டை பகுதியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், முன்அறிவிப்பின்றி அடிக்கடி மின்தடையும் ஏற்படுகிறது. இதனால் முதியோா்கள், குழந்தைகள் பெரிதும் அவதிப்படுகின்றனா். காற்றாலை மின்சாரம் உற்பத்தி அதிகம் நடைபெறும் சுரண்டை பகுதியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் தொழில்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.