விபத்தில் சிக்கியவா்களை மீட்டுக் காப்பாற்றுவோருக்கு பணப் பரிசு, விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ச. கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் விபத்தில் சிக்கியவா்களை தக்க நேரத்தில் காப்பாற்றி துரிதமாக செயல்பட்டு உரிய நேரத்துக்குள் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உயிா்காக்கும் பணியை மேற்கொள்ளும் பொதுமக்கள், அவா்களது பணியைப் பாராட்டி நல்ல சமாரியன் விருது, ரூ. 5 ஆயிரம் ரொக்கப் பரிசு, சான்றிதழ் தமிழக அரசால் வழங்கிக் கெளரவிக்கப்படுவா் என்றாா் அவா்.