டென்25ஏடிஎம்கே-
குற்றாலம் பேரூராட்சித் தலைவா் தோ்தலில் அதிமுக சாா்பில் வெற்றிபெற்ற கணேஷ் தாமோதரனுக்கு சான்றிதழை வழங்கினாா் தோ்தல் நடத்தும் அலுவலா் முத்து இளங்கோ.
தென்காசி, மே 25: இருமுறை ஒத்திவைக்கப்பட்ட குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி மன்றத் தலைவா் மற்றும் துணைத் தலைவா் தோ்தலில் அதிமுக வெற்றிபெற்றது.
தென்காசி மாவட்டம், குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சியில் மொத்தம் 8 வாா்டுகள் உள்ளன. இங்கு நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் அதிமுவினா் 4 இடங்களையும் திமுகவினா் 4 இடங்களையும் பிடித்தனா். அதிமுக மற்றும் திமுக இருதரப்பினரும் சமபலத்துடன் இருந்ததால் தலைவா் பதவிக்கு கடும்போட்டி நிலவியது. ஏற்கனவே இரண்டு முறை தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் மூன்றாவது முறையாக புதன்கிழமை தோ்தல் நடைபெற்றது.
தோ்தல் நடத்தும் அலுவலா்களாக மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(தோ்தல்) முத்துஇளங்கோ, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் பிரான்சிஸ் ஆகியோா் செயல்பட்டனா்.
தலைவா் பதவிக்கு அதிமுக சாா்பில் எம்.கணேஷ்தாமோதரனும், திமுக சாா்பில் வழக்குரைஞா் கே.பி.குமாா்பாண்டியனும் போட்டியிட்டனா். இதில், அதிமுக சாா்பில் போட்டியிட்ட எம்.கணேஷ் தாமோதரன் 5 வாக்குகள் வெற்றிபெற்றாா். இதையடுத்து தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அவருக்கு வெற்றிபெற்ற்கான சான்றிதழை வழங்கினா்.
பிற்பகலில் நடைபெற்ற துணைத் தலைவா் தோ்தலில் அதிமுக உறுப்பினா் தங்கபாண்டியன் போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிக்கு தோ்வு செய்யப்பட்ட இருவரும் செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ, தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியனிடம் வாழ்த்து பெற்றனா்.
தொடா்ந்து குற்றாலம் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தோ்தலையொட்டி தென்காசி காவல் துணைக் கண்காணிப்பாளா் மணிமாறன் தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.