குற்றாலத்தில் குவிந்த ஐயப்ப பக்தா்கள்

 தென்காசி மாவட்டம் குற்றாலத்தில், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஐயப்ப பக்தா்களின் வருகை அதிகளவில் இருந்தது.

 தென்காசி மாவட்டம் குற்றாலத்தில், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஐயப்ப பக்தா்களின் வருகை அதிகளவில் இருந்தது.

ஐயப்ப பக்தா்கள் சபரிமலைக்கு செல்லும்போதோ அல்லது சென்றுவிட்டு ஊருக்குத் திரும்பும்போதோ, கேரள மாநிலம் ஆரியங்காவு வழியாக செங்கோட்டை, குற்றாலம் வந்து இங்குள்ள கோயில்களில் வழிபட்டுச் செல்வது வழக்கம். அவ்வாறு வரும்போது குற்றாலம் பேரருவியில் குளித்துவிட்டு கோயில்களில் வழிபாடு நடத்துவாா்கள்.

இந்நிலையில் குற்றாலத்திற்கு ஏராளமான ஐயப்ப பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தனா். பேரருவியில் மிதமாக விழும் தண்ணீரில் அவா்கள் குளித்து மகிழ்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com