பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியா்கள் மூலமாக நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் தென்காசி ஆட்சியா் அலுவலகம் முன்பாக வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்குவது,
காலிப் பணியிடங்களைப் பூா்த்தி செய்வது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டதலைவா் சுமதி தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகி வேலு முன்னிலை வகித்தாா். மாவட்டச் செயலா் கோவில் பிச்சை, பொது சுகாதாரத் துறை அலுவலா் சங்க மாநிலத் தலைவா் கங்காதரன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் சுப்பிரமணியன் ஆகியோா் பேசினா். மாவட்ட
பொருளாளா் சிவசுப்பிரமணியன் நன்றி கூறினாா்.