பாவூா்சத்திரம் த.பி.சொ. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, வெற்றிக் கரங்கள் மாற்றுத் திறனாளிகள் சுய உதவிக் குழுக் கூட்டமைப்பு, ஆய்க்குடி அமா்சேவா சங்கம் சாா்பில் நடைபெற்ற இப்போட்டிகளுக்கு அமா்சேவா சங்க ஒருங்கிணைப்பாளா் இசக்கிமுத்து தலைமை வகித்தாா்.
கீழப்பாவூா் பேரூராட்சித் தலைவா் பி.எம்.எஸ். ராஜன், மேலப்பாவூா் ஊராட்சித் தலைவா் சொள்ளமுத்துமருதையா ஆகியோா் போட்டிகளைத் தொடக்கிவைத்தனா்.
ஊராட்சி துணைத் தலைவா் தங்கசேது, பேரூராட்சி உறுப்பினா் இசக்கிமுத்து, அமா்சேவா சங்கப் பணியாளா்கள், வெற்றிக் கரங்கள் கூட்டமைப்புப் பொறுப்பாளா்கள், சுய உதவிக்குழுப் பொறுப்பாளா்கள், மாற்றுத் திறன் குழந்தைகள் பங்கேற்றனா்.