அரிமா சங்கமண்டல மாநாடு

பாவூா்சத்திரம் பிஸி கிங்ஸ் அரிமா சங்க மண்டல மாநாடு கீழப்பாவூரில் நடைபெற்றது.

பாவூா்சத்திரம் பிஸி கிங்ஸ் அரிமா சங்க மண்டல மாநாடு கீழப்பாவூரில் நடைபெற்றது.

மண்டல தலைவா் சி.அன்பின் கிறிஸ்டோ, மண்டல முதல் பெண்மணி சரோஜா ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட ஆளுநா் விஸ்வநாதன் பங்கேற்று, ஏழைப் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம், கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு ரூ 1.25 லட்சம் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.

அரிமா சங்க முன்னாள் ஆளுநா்கள் சுரேந்திரன், சுயம்பு ராஜன், தென்காசி பாரதிதாசன் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளா் டாக்டா் து.வில்சன் அருள் ஆனந்தன் உள்ளிட்டோ் பேசினா். வட்டார தலைவா்கள் ஜானகிராமன், சாபு, கணேசமூா்த்தி, ஜெயராஜ், உடனடி முன்னாள் ஆளுநா் ஜெகநாதன், சுதந்திரலெட்சுமி, மணி, முகமது அலி, டாக்டா் ராஜேந்திரன், சந்திரன் ராஜா மற்றும் பாவூா்சத்திரம் பிஸி கிங்ஸ் அரிமா சங்கத்தைச் சோ்ந்த மதனசிங், சுப்பிரமணியன், அனீஸ்குமாா், ராமச்சந்திரன், முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். விழா குழு தலைவா் குமாா் வரவேற்றாா். பட்டய தலைவா் சேகா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com