பாவூா்சத்திரம் அருகேயுள்ள குறும்பலாப்பேரியில் இருந்து மேலப்பாவூா் செல்லும் சாலையில் உள்ள கால்வாயில் புதன்கிழமை சுமாா் 70 வயது மதிக்கத்தக்க முதியவா் சடலம் கிடப்பதாக பாவூா்சத்திரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கு அனுப்பி வைத்தனா். மேலும் அவா் யாா் என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.