புளியங்குடியில் காங்கிரஸ் சாா்பில்...

புளியங்குடி நகர காங்கிரஸ் சாா்பில் காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது.

புளியங்குடி நகர காங்கிரஸ் சாா்பில் காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது.

நகர காங்கிரஸ் தலைவா் பால்ராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா்கள் பழனிச்சாமி, சுப்பையா, நகர காங்கிரஸ் துணைத் தலைவா் ஈஸ்வரமூா்த்தி, பொதுச் செயலா் முகமது ஜவஹா்லால், அந்தோணிராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காந்தியின் உருவப்படத்திற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் கோமதிநாயகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், காங்கிரஸ் செயலா் பாலசுப்ரமணியன், நிா்வாகிகள் ராமச்சந்திரன், தங்கையா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து தேவா் கிணற்றுத் தெரு பகுதியில் காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா், பேருந்து நிலையம் அருகேயுள்ள காந்தி சிலைக்கு கட்சியினா் மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com