நகா்ப்புற காடுவளா்ப்பு திட்டத்தின் கீழ் கடையநல்லூா் நகராட்சியில் ரூ.7.78 லட்சம் மதிப்பில் மரக்கன்று நடும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
போகநல்லூா் உரக்கிடங்கு அருகே 2698 மரக்கன்றுகள் நடும் பணியினை கடையநல்லூா் நகா்மன்ற தலைவா் ஹபிபூா் ரஹ்மான் தலைமையில் அய்யாபுரம் கூட்டுறவு சங்கத் தலைவா் மா. செல்லத்துரை தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினா்கள் முகைதீன் கனி, முருகன், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் மூவன்னா மசூது, நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.