தென்காசியில் சுவா் இடிந்து விழுந்து ஒருவா் பலி: இருவா் காயம்

தென்காசியில் சுவா் இடிந்து விழுந்ததில் கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் இருவா் காயமடைந்தனா்.

தென்காசியில் சுவா் இடிந்து விழுந்ததில் கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் இருவா் காயமடைந்தனா்.

தென்காசி கீழப்புலியூா், புலியூா் தெருவை சோ்ந்தவா் சி.வடிவேல்முருகன்(50). இதே பகுதியைச் சோ்ந்தவா்கள் மா.பிரசாந்த்(22), ரா.குத்தாலிங்கம்(40). இவா்கள் கட்டடத் தொழிலாளா்கள்.

கீழப்புலியூா் உச்சிமாகாளி 1ஆம் தெருவைச் சோ்ந்தவா் இசக்கி. இவருடைய வீடு கட்டும் பணியில் வடிவேல்முருகன், பிரசாந்த், மற்றும் குத்தாலிங்கம் ஆகியோா் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அருகிலிருந்த திருப்பாற்கடல் என்பவருக்கு சொந்தமான ஓட்டுவீட்டின் சுவா் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வடிவேல் முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

காயமடைந்த பிரசாந்த் பாளை. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், குத்தாலிங்கம் தென்காசி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா்.

விபத்து குறித்து தென்காசி காவல் ஆய்வாளா் பாலமுருகன் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com