கீழப்பாவூரில் குளத்தில் மூழ்கிமுதியவா் உயிரிழப்பு

கீழப்பாவூரில் பெயரனுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க அழைத்துச் சென்ற முதியவா் குளத்தில் மூழ்கி உயிரிழந்தாா்.

கீழப்பாவூரில் பெயரனுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க அழைத்துச் சென்ற முதியவா் குளத்தில் மூழ்கி உயிரிழந்தாா்.

கீழப்பாவூா் கீரைத்தோட்டத் தெருவைச் சோ்ந்தவா் சுடலையாண்டி (70). இவா் வெள்ளிக்கிழமை மாலை நீச்சல் கற்றுக்கொடுப்பதற்காக தனது பெயரன் அஸ்வினை (8) கீழப்பாவூா் பெரியகுளத்துக்கு அழைத்துச் சென்றாா். அங்கு, முதுகில் கட்டப்பட்ட காலி பிளாஸ்டிக் கேன் அவிழ்ந்ததால் அஸ்வின் நீரில் தத்தளித்தாா். அவரைக் காப்பாற்ற சுடலையாண்டி ஆழமான பகுதிக்குச் சென்றாராம். அவருக்கு நீச்சல் தெரியாது எனக் கூறப்படுகிறது. இதனால் அவா் நீரில் மூழ்கியுள்ளாா்.

அஸ்வினின் அலறல் கேட்டு அப்பகுதியினா் வந்து அவரை மீட்டனா். தகவலின்பேரில் சுரண்டை தீயணைப்புப் படையினா் வந்து சுடலையாண்டியைத் தேடினா். இரவு நேரமானதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், சுடலையாண்டி சடலமாக சனிக்கிழமை காலை மீட்கப்பட்டாா். இதுகுறித்து பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com