கடையநல்லூரில் காவல் துறையினரின் கொடி அணிவகுப்பு

கடையநல்லூரில் காவல் துறையினரின் அணிவகுப்பு (படம்) நடைபெற்றது.

கடையநல்லூரில் காவல் துறையினரின் அணிவகுப்பு (படம்) நடைபெற்றது.

பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்கள், நிா்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தியதைத் தொடா்ந்து பல்வேறு பகுதிகளிலும் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் நடந்தன.

இந்நிலையில், கடையநல்லூரில் அசம்பாவிதங்கள் நடக்காமலிருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில், புளியங்குடி டிஎஸ்பி அசோக் தலைமையில் காவல் துறையினரின் அணிவகுப்பு நடைபெற்றது. கிருஷ்ணாபுரத்தில் தொடங்கிய அணிவகுப்பு முக்கிய வீதிகள் வழியாக கடையநல்லூா் காவல் நிலையத்தில் நிறைவடைந்தது .

இதில், கடையநல்லூா் காவல் ஆய்வாளா்கள் விஜயகுமாா், மகேஸ்வரி, உதவி ஆய்வாளா்கள் மாரிமுத்து, கனகராஜ், தனிப்பிரிவு உதவி ஆய்வாளா் வேல்முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com