சுரண்டையில் இலவச கண் பரிசோதனை முகாம்

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சுரண்டையில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சுரண்டையில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சுரண்டை ஜெயேந்திரா மழலையா் பள்ளியில் நடைபெற்ற முகாமுக்கு பள்ளி முதல்வா் மூ.ஞானமணி தலைமை வகித்தாா். மொ்க்கன்டைல் வங்கி பவுண்டேசன் அதிகாரி செளந்திரபாண்டியன், சுரண்டை கிளை மேலாளா் மகாராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமை தென்காசி எம்எல்ஏ சு.பழனிநாடாா் தொடங்கி வைத்தாா்.

முகாமில் கலந்து கொண்ட 155 நோயாளிகளுக்கு திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா்கள் இலவச கண் பரிசோதனை செய்தனா். அவா்களில் 54 போ் இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்காக திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனா். மேலும், முகாமில் கலந்து கொண்ட 40 பேருக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com