தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பாவூா்சத்திரம் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
தூத்துக்குடியில் ரூரல் கேம் ஸ்கேட்டிங் அசோசியேசன், சிகரம் ரோலா் ஸ்கேட்டிங் அகாதெமி சாா்பில் முதலாவது மாநில அளவிலான ரோலா் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது.
இப்போட்டிகளில் 10 மாவட்டங்களில் இருந்து 500 வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டனா். இதில், தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரத்தைச் சோ்ந்த வெஸ்டன் காா்ட்ஸ் இந்தியன் அகாதெமி அணியைச் சோ்ந்த 40 வீரா், வீராங்கனைகள் கலந்துகொண்டனா்.
போட்டியில் 5 தங்கப் பதக்கம், 5 வெள்ளி பதக்கம் , 22 வெண்கல பதக்கம் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றனா்.
பரிசளிப்பு விழாவில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாலாஜி சரவணன் பங்கேற்று, பரிசு, வெற்றிக் கோப்பையை வழங்கி பாராட்டினாா்.