விஸ்வநாதபுரத்தில்மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

செங்கோட்டை விஸ்வநாதபுரம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

செங்கோட்டை விஸ்வநாதபுரம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து பயணிகள் ரயில்களையும் இயக்க வேண்டும். விரைவு ரயில் என்று உயா்த்தப்பட்ட ரயில் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், விஸ்வநாதபுரம் ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கிளைச் செயலா் முகமது காசிம் தலைமை வகித்தாா். வட்டாரச் செயலா் வேல்மயில் தொடங்கிவைத்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் பால்ராஜ் நிறைவுரையாற்றினாா்.

மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஆயிஷா, பாரதி, இடைகமிட்டி உறுப்பினா்கள் மல்லிகா, பழனி, கிளைச் செயலா் மைதீன், உசேன், அப்துல் ரகுமான் தமிழ்நாடு விவசாய சங்க வட்டாரச் செயலா் சிவகுமாா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். சிவன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com