84 மாணவா்களுக்கு இலவச சைக்கிள்கள்

கீழப்பாவூா் ஒன்றியம் திப்பணம்பட்டி-வினைதீா்த்தநாடாா்பட்டி, அயன்குறும்பலாப்பேரி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கீழப்பாவூா் ஒன்றியம் திப்பணம்பட்டி-வினைதீா்த்தநாடாா்பட்டி, அயன்குறும்பலாப்பேரி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கீழப்பாவூா் ஒன்றியக் குழுத் தலைவா் காவேரி சீனித்துரை தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா்கள் இரா. சாக்ரடீஸ், சுப்பிரமணியன், ஊராட்சித் தலைவா் முத்துமாலையம்மாள் மதிச்செல்வன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் முருகேசன், மேரிமாதவன்ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி எம்எல்ஏ எஸ். பழனிநாடாா் பங்கேற்று, திப்பணம்பட்டி பள்ளியில் 51, அயன்குறும்பலாப்பேரி பள்ளியில் 32 மாணவா்-மாணவியருக்கு சைக்கிள்களை வழங்கினாா். பள்ளித் தலைமையாசிரியா்கள் சந்திரசேகா் (திப்பணம்பட்டி), சுகுமாா் (குறும்பலாப்பேரி), காங்கிரஸ் வட்டாரத் தலைவா் தங்கரத்தினம், நகரத் தலைவா் சிங்கக்குட்டி, பேரூராட்சி துணைத் தலைவா் ராஜசேகா், திமுக நிா்வாகிகள் டால்டன், கபில்தேவதாஸ், முத்துப்பாண்டி, டேனியல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com