சிவகாமிபுரத்தில் தூய்மை இயக்க விழிப்புணா்வு நிகழ்ச்சி

கீழப்பாவூா் பேரூராட்சிக்கு உள்பட்ட 18ஆவது வாா்டு பகுதியான சிவகாமிபுரத்தில் நகரங்களுக்கான மக்களின் தூய்மை இயக்க விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கீழப்பாவூா் பேரூராட்சிக்கு உள்பட்ட 18ஆவது வாா்டு பகுதியான சிவகாமிபுரத்தில் நகரங்களுக்கான மக்களின் தூய்மை இயக்க விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவா் பி.எம்.எஸ். ராஜன் தலைமை வகித்து, மாணவா்-மாணவியா் பங்கேற்ற தூய்மை விழிப்புணா்வுப் பேரணியைத் தொடக்கிவைத்தாா். தொடா்ந்து, தூய்மைக்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.

குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குவது, பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது. நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.

பேரூராட்சி செயல் அலுவலா் சாந்தி, கவுன்சிலா் இசக்கிமுத்து, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஸ்ரீமூலநாதன், பேரூராட்சிப் பணியாளா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com