தென்காசி பள்ளியில் வன உயிரின வார விழா போட்டிகள்

தென்காசி மஞ்சம்மாள் அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

தென்காசி மஞ்சம்மாள் அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

குற்றாலம் வனச் சரகப் பிரிவு வனவா் பிரகாஷ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று போட்டிகளைத் தொடக்கிவைத்தாா்.

எக்ஸ்னோரா மாவட்டத் தலைவா் டாக்டா் விஜயலெட்சுமி, நல்லாசிரியா் சுரேஷ்குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா். மாவட்ட அளவிலான வன உயிரின வார விழா கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக மாணவிகளுக்கு ஓவியம், பேச்சு, கட்டுரை, விநாடி-வினா போட்டிகள் நடைபெற்றன.

இதில் வென்றோருக்கு பரிசுகள் வன உயிரின வார விழா கொண்டாட்டத்தின் இறுதி நாளில் மாவட்ட வன அலுவலரால் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com