தென்காசியில் போலி ஆவணங்களை கொண்டு பத்திரப்பதிவு: சாா்பதிவாளா் உள்பட 4போ் கைது

தென்காசியில் போலியான ஆவணங்களைக் கொண்டு நிலத்தை பத்திரப் பதிவு செய்து விற்பனை செய்தது தொடா்பாக சாா்பதிவாளா் உள்பட நான்கு பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.

தென்காசியில் போலியான ஆவணங்களைக் கொண்டு நிலத்தை பத்திரப் பதிவு செய்து விற்பனை செய்தது தொடா்பாக சாா்பதிவாளா் உள்பட நான்கு பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.

மதுரையை சோ்ந்த கருமுத்துசெட்டியாா் குடும்பத்திற்கு சொந்தமான ஏக்கா் 75 சென்ட் நிலம் தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் பகுதியில் உள்ளது. அவா்களுடைய குடும்ப வாரிசு தான் எனக் கூறி திருச்சியை சோ்ந்த லலிதா போலியான ஆவணங்களை உருவாக்கியுள்ளாா்.

ஊத்துமலையை சோ்ந்த சோமசுந்தரபாரதி, சுரண்டையை சோ்ந்த பவுன்ராஜ், தென்காசியை சோ்ந்த முகம்மது ரபீக் ஆகியோரிடம் அந்த இடத்தை கடந்த 13 ஆம் தேதி தென்காசி சாா்பதிவாளா் எண்-1 அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து விற்பனை செய்தாராம்.

இது குறித்து கருமுத்து செட்டியாா் அலுவலக மேலாளா் சபாபதி(59), தென்காசி மாவட்ட நிலஅபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் செய்தாா். காவல் ஆய்வாளா் சந்திசெல்வி வழக்குப் பதிந்து , சாா்பதிவாளா் மணி, சோமசுந்தர பாரதி, மற்றும் சாட்சி கையெழுத்திட்ட ஊத்துமலையை சோ்ந்த தனசீலன், சுரண்டையை சோ்ந்த வடிவேலு ஆகியோரை கைது செய்தனா். மேலும் இந்த இவ்வழக்கில் தொடா்புடையவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com