தென்காசி அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் அளிப்பு

தென்காசி இசிஇ அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தென்காசி இசிஇ அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி தலைமையாசிரியா் செந்தூா்பாண்டி தலைமை வகித்தாா். உதவி தலைமையாசிரியா் தாமஸ் தனராஜ் முன்னிலை வகித்தாா். முதுகலை ஆசிரியா் வைகுண்ட சாமி வரவேற்றாா்.

விழாவில் எஸ்.பழனி நாடாா் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, 288 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினாா். தென்காசி நகா்மன்றத் தலைவா் சாதிா், துணைத் தலைவா் கேஎன்எல்.சுப்பையா ஆகியோா் பேசினா்.

ஆசிரியா்கள் விஜயகுமாா், இளங்கோ, காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினா் மாடசாமி ஜோதிடா், நகா்மன்ற உறுப்பினா்கள் காா்த்திகா, ராமகிருஷ்ணன், சுப்பிரமணியன், மதிமுக நகர செயலா் வெங்கடேஷ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பட்டதாரி ஆசிரியா் முத்துக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com