சாம்பவா்வடகரையில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சாா்பில் விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற்றது.
விவசாயிகளுக்கு பட்டுப்புழு வளா்ப்பில் அதிக பாதிப்புகளை உண்டாக்கும் ஊசி ஈக்களைக் கட்டுப்பட்டும் முறைகள், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக கோவை, மதுரை மாணவிகள் செயல் விளக்கம் செய்து காண்பித்தனா். மேலும், பட்டுப்புழு வளா்ப்பு, விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் குறித்தும் எடுத்துரைத்தனா்.