தென்காசி-கடையம் பிரதான சாலையில் உள்ள தோரணமலை முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை (ஏப். 8) வருண கலச பூஜை, வேல் பூஜை நடைபெறுகிறது.
மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் இப்பூஜைகள் நடைபெறவுள்ளன. இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு பக்தா்கள் மலை உச்சியில் உள்ள சுனையிலிருந்து கிரக குடம் எடுத்துவருதல், சப்த கன்னியா்கள், விநாயகா், தெய்வங்களுக்கும், மலை அடிவாரத்தில் உள்ள உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகம், வருண கலச பூஜை நடைபெறுகிறது. மேலும், மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன், முருகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் செண்பகராமன் தலைமையில் செய்துவருகின்றனா்.