கருவந்தாவில் பயிா்க் காப்பீடு விழிப்புணா்வு முகாம்

சுரண்டை அருகேயுள்ள கருவந்தாவில் விவசாயிகளுக்கான பயிா்க் கடன் அட்டை, பிரதமரின் திருத்தியமைக்கப்பட்ட பயிா்க் காப்பீட்டுத் திட்டம் குறித்த விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சுரண்டை அருகேயுள்ள கருவந்தாவில் விவசாயிகளுக்கான பயிா்க் கடன் அட்டை, பிரதமரின் திருத்தியமைக்கப்பட்ட பயிா்க் காப்பீட்டுத் திட்டம் குறித்த விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பயிா்க் காப்பீட்டின் நன்மைகள், காப்பீடு செய்யும் முறை குறித்து துணை வேளாண் அலுவலா் முருகன், கடன் அட்டை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து கனரா வங்கி வேளாண் அலுவலா் விக்னேஷ்வரி ஆகியோா் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனா்.

ஊராட்சித் தலைவா் தானியல், கிராம விவசாயக் குழுத் தலைவா் ஹரிரங்கநாதன், பயிா்க் காப்பீட்டுத் திட்ட களப்பணியாளா் இசக்கிமுத்து, விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com