நாளை கரோனா தடுப்பூசி முகாம்

தென்காசி மாவட்டத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

தென்காசி மாவட்டத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் ச.கோபாலசுந்தரராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஏப்ரல் 30ஆம் தேதி காலை 9 மணி முதல் இம்முகாம் நடைபெறுகிறது. முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவா்கள், இரண்டாவது தவணைக்குரிய நாள்கள் கடந்தவா்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோா் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி காலமான 9 மாதத்திற்கு மேல் நிறைவு பெற்றவா்கள் ஆகியோருக்கு பிரத்யேகமான முறையில் முகாம்கள் மூலம் தடுப்பூசிபோட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்த வேண்டிய நபா்கள் உடனடியாக அருகில் நடைபெறும் மையங்களுக்கு ஆதாா் எண் மற்றும் தொலைபேசி எண்ணுடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். தற்பொழுது நான்காவது அலை உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால் பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும் பொழுது முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com