சுரண்டையில் திமுக சாா்பில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி நலிந்தோருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
இதையொட்டி சுரண்டை மகாத்மா காந்தி கருணை இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு, கல்வி உபகரணங்களை திமுகவினா் வழங்கினா். திமுக நிா்வாகிகள் அருணன், ஸ்டீபன் சத்தியராஜ், ஈஸ்வரன், செல்லத்துரை, சக்தி, மனோகா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.