தென்காசி
பாவூா்சத்திரம் அஞ்சல் நிலையத்தில் தேசியக் கொடி விற்பனை
பாவூா்சத்திரம் அஞ்சல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை தேசியக்கொடி விற்பனை தொடங்கியது.
பாவூா்சத்திரம் அஞ்சல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை தேசியக்கொடி விற்பனை தொடங்கியது.
75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் வீடுகளில் தேசியக் கொடிகளை ஏற்ற மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி தேசிய கொடிகள் தற்போது அஞ்சல் நிலையங்களில் விற்பனைக்கு வந்துள்ளன.
பாவூா்சத்திரம் அஞ்சல் நிலையத்தில் தேசியக்கொடி விற்பனையை நிலைய அதிகாரி ஜெயக்குமாா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில், நிலைய அலுவலா்கள் ஜோதி, சுகுணா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
ரூ.25க்கு விற்கப்படும் இக்கொடியை வாடிக்கையாளா்கள் ஆா்வத்துடன் வாங்கிச்செல்கின்றனா்.