சுரண்டையில் பாஜக சாா்பில், மத்திய அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
நகரத் தலைவா் அருணாசலம் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஆறுமுகச்சாமி, கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவா் ராஜேஷ் ராஜா, அருள்செல்வன் ஆகியோா் மத்திய அரசின் சாதனைகளை விளக்கிப் பேசினா்.
நிா்வாகிகள் பவுன்ராஜ், வல்லபகணேசன், சிவனணைந்தபெருமாள், செந்தில்குமாா், சுந்தரகுமாா், ஐயப்பன், வசந்தகுமாா், சுப்பையா, முருகேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.