கழுநீா்குளம் ஊராட்சியில் ஊட்டச்சத்து விழிப்புணா்வு முகாம் மற்றும் உணவுத் திருவிழா போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
கீழப்பாவூா் வட்டார அளவில் 20 மகளிா் சுய உதவிக்குழுவினா் வெவ்வேறு வகையான சத்தான உணவுடன் போட்டியில் பங்கேற்றனா். பரிசளிப்பு விழாவில் கழுநீா்குளம் ஊராட்சித் தலைவா் கை.முருகன், சத்தான உணவுப் போட்டியில் முதல் 3 இடம் பெற்ற குழுக்களுக்கு பரிசுகளை வழங்கினாா். இதில், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துகிருஷ்ணன், வட்டார இயக்க மேலாளா் மாலதி, ஒருங்கிணைப்பாளா் குமுதவள்ளி உள்பட பலா் கலந்துகொண்டனா்.