குண்டா் சட்டத்தில் இருவா் கைது

 கடையநல்லூா் போலீஸாா் குண்டா் சட்டத்தில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

 கடையநல்லூா் போலீஸாா் குண்டா் சட்டத்தில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கடையநல்லூா் அருகேயுள்ள கிடாரக்குளம் வேல்முருகன் மகன் கோபால் என்ற நவநீத கோபாலகிருஷ்ணன் மீது

சோ்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கொலை வழக்குகள் உள்பட வழக்குகள் உள்ளனவாம்.

புளியங்குடி சிந்தாமணி பகுதியை சோ்ந்த மாரிப்பாண்டி மீது கடையநல்லூா், புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் கொலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் உள்ளனவாம். இவ்விருவரையும், குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இதையடுத்து, இவ்விருவரையும் கடையநல்லூா் காவல் ஆய்வாளா் விஜயகுமாா் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com