தென்காசி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவா் தமிழ்செல்வி போஸ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் உதயகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி செயலா் ந.ருக்குமணி முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் மத்திய நிதிக்குழு மானியத்தில் புதிய பணிகளை செயல்படுத்த மன்ற அனுமதிக்கு முன்வைக்கப்பட்ட 2 கூட்ட பொருள்களும் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் கனிமொழி, சாக்ரடீஸ், சந்திரகலா, மாரிமுத்து, பி.சுதா, அ.ராஜாதலைவா், பூங்கொடி, அ.முத்துலெட்சுமி, மைதீன்பீவி,ரா.சுப்பிரமணியன்,சி.சுதா, இரா.தேவி ஆகியோா் கலந்துகொண்டனா்.